• Skip to primary navigation
  • Skip to main content
  • Skip to primary sidebar
Gully Sports

Gully Sports

Making inroads thru Sports!

  • Cricket
    • IPL
  • Football
  • Athletics
  • TN Special
  • Other Sports
  • Dream 11
  • Entertainment
    • Books
    • Movies
    • Nostalgia
  • Show Search
Hide Search
Rahane

இந்தியா – ஆஸி தொடருக்காக உலகக்கோப்பையை இழந்திருக்கிறோம்… பொறுப்புணர்ச்சி இருக்கட்டும்!

மூன்றாவது டெஸ்ட் போட்டியை (AUS vs IND) ஆடுவதற்காக இன்று மெல்பர்னிலிருந்து சிட்னிக்கு பயணிக்கவிருக்கிறது இந்திய அணி. ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், நவ்தீப் சைனி, ப்ரித்வி ஷா, ரிஷப் பன்ட் என இந்திய அணியின் ஐந்து வீரர்கள் குவாரன்டைன் விதிமுறைகளை மீறி ரெஸ்டாரண்டுக்கு சென்றதாக முன்னதாக சர்ச்சை எழுந்திருந்தது. ‘விதியை பின்பற்ற முடியவில்லை எனில் கிரிக்கெட் ஆடவே வந்திருக்கக்கூடாது’ என குயின்ஸ்லாந்து சுகாதாரத்துறை அமைச்சரும் இந்திய அணியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று ஒட்டுமொத்தமாக இந்திய அணி முழுமைக்கும் கோவிட்19 பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதில், விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட வீரர்கள் உட்பட யாருக்குமே கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி சிட்னிக்கு பயணப்படுவதில் இருந்த சிக்கல்கள் நீங்கியுள்ளது.

‘நீங்கள் மைதானத்தில் ரசிகர்களை அனுமதிக்கிறீர்கள். ஆனால், வீரர்களை மட்டும் கடுமையான குவாரண்டைனில் இருக்க சொல்கிறீர்கள். இது மிகப்பெரிய முரண்பாடாக இருக்கிறது. ஆஸ்திரேலிய குடிமகன்களுக்கு என்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதோ, அதையே நாங்களும் கடைபிடிக்க தயாராக இருக்கிறோம். ரசிகர்களை மைதானத்திற்குள் அனுமதிக்கவில்லை எனில், நாங்கள் குவாரண்டைனில் இருப்பதில் அர்த்தம் இருக்கிறது. ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் நாங்கள் எங்கள் தளத்தை தாண்ட கூட கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டிருக்கிறது. மைதானத்தில் கிரிக்கெட் ஆட மட்டும் அனுமதித்து விட்டு ஹோட்டல் அறைகளில் அடைத்து விடுகின்றனர். நாங்கள் ஒன்றும் மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகள் கிடையாது’ என ஆஸியின் கிடுக்குப்பிடி கெடுபிடிகளுக்கு இந்திய அணியின் சார்பாக பதிலடியும் கொடுக்கப்பட்டுள்ளது.

Also Read: பீஃப் சாப்பிட்டது குத்தமா… ரோஹித் மீது பாயும் வெறுப்பாளர்கள்!

பிரிஸ்பேன் சென்று நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கும் இந்திய ஆட்சேபனை தெரிவித்துள்ளது. சிட்னியில் வைத்தே அடுத்த போட்டியையும் நடத்த வேண்டும் என இந்திய அணி கூறியுள்ளது. இது குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

ஆஸி முன்னாள் வீரர்கள், ஆஸி பத்திரிகைகள் என எல்லாமும் இந்தியாவை ஏகத்துக்கும் விமர்சித்து கொண்டிருக்கின்றனர். நிஜமாகவே தவறு எந்த பக்கம் இருக்கிறது??

‘நீங்கள் அணியில் இடம்பிடிக்க விருப்பம் தெரிவித்திருக்கக்கூடாது அல்லது குவாரண்டைன் விதிமுறைகளை முழுமையாக கடைபிடித்திருக்க வேண்டும்’ என சஞ்சய் மஞ்சரேக்கர் இந்திய அணி குறித்து ட்வீட் செய்திருக்கிறார். இது நியாமான விமர்சனமாகவே தெரிகிறது.

AUS vs IND
AUS vs IND

உலகம் முழுவதும் கொரோனாவால் குவாரன்டைன் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகிறது என்பது இந்திய அணிக்கு தெரியும். அந்த கடுமையான குவாரன்டைன் விதிமுறைகளை பின்பற்றிதான் ஐ.பி.எல் ஆடியிருக்கின்றனர். ஆஸியிலும் அதேமாதிரியான விதிமுறைகளை பின்பற்றியாக வேண்டும் என தெரிந்து அதற்கு ஒப்புக்கொண்ட பிறகுதான் ஆஸிக்கு ப்ளைட் ஏறியிருப்பார்கள். பிறகு ஏன் அங்கே இருந்து கொண்டு குவாரன்டைன் விதிமுறைகளை மீறயதாக சலசலப்பு ஏற்படும் அளவுக்கு நடந்துக்கொள்ள வேண்டும்? விதிமுறைகளுக்கு ஒப்புக்கொண்டு களமிறங்கிய பின் சர்ச்சைகளை உண்டாக்குவது முறையானதாக இல்லை.

எல்லாருமே குவாரன்டைன் விதிமுறைகளை 100 சதவீதம் கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் என்பதை புரிந்துகொண்டிருக்க வேண்டும். உலகிலேயே முதன்முதலாக கொரோனா இல்லாத நாடு என அறிவிக்கப்பட்டது நியூஸிலாந்துதான். ஆனால், அங்கேயே இப்போது கிரிக்கெட் ஆட சென்றிருந்த பாகிஸ்தான் அணியில் பல பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Also Read: ரிஷப் பன்ட் ரசிகரை கட்டிப்பிடிக்கவில்லை; இந்திய அணியில் யாருக்கும் கொரோனா இல்லை!

வெகு சமீபத்தில் தென்னாப்பிரிக்கா Vs இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரே கொரோனா பரவலால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதையெல்லாம் இந்திய அணி கவனித்திருந்தால் நாங்கள் என்ன விலங்குகளா? போன்ற எதிர்வினைகள் வெளிப்பட்டிருக்காது. குவாரன்டைன் கட்டுப்பாட்டுகள் காலத்தின் கட்டாயமாகிவிட்டது. அதை முறையாக பின்பற்றுவதன் மூலம்தான் தங்கள் உடல்நலத்தை முழுமையாக பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதையாவது இந்திய அணி உணர வேண்டும்.

இந்திய அணியை மட்டுமே இதில் குறை சொல்லிவிட முடியாது. ஆஸி தரப்பிலும் குறைகள் இருக்கிறது. இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஐ.பி.எல் தொடரிலிருந்து கிட்டத்தட்ட 5-6 மாதங்கள் குவாரன்டைனில் இருக்கின்றனர். அந்நிலையில் இந்திய அணி லாக்டவுனுக்கு பிறகான முதல் தொடராக ஆஸிக்கு பயணப்படும் போது இந்திய வீரர்களுக்கான அதிகபட்ச சௌகரியத்தை உறுதி செய்து கொடுக்க வேண்டியது ஆஸி கிரிக்கெட் போர்டின் கடமை. ஆனால், அவர்கள் அதை முழுமையாக செய்ததாக தெரியவில்லை. உயிரை பணயம் வைத்து கிரிக்கெட் ஆட வந்திருக்கும் விருந்தாளிகளை கிடைக்கிற கேப்பிலெல்லாம் ஆஸியின் முன்னாள் வீரர்களும் பத்திரிகைகளும் விமர்சனம் என்ற பெயரில் உளவியல் ரீதியாக தாக்கி வருகின்றனர். ஓரிரு மைதானங்களில் தொடரை நடத்துவதற்கு பதிலாக நான்கு போட்டிகளை நான்கு மைதானங்களில் நடத்துவதே சரியாக இல்லை. குறைந்தபட்சம், இந்திய அணி இப்போது கோரிக்கை வைக்கும் போதாவது ஆஸி கிரிக்கெட் போர்டு ப்ரிஸ்பேனுக்கு பதில் சிட்னியிலேயே அடுத்த போட்டியை நடத்துவது குறித்து யோசிக்க வேண்டும்.

Also Read: “செய்த தவறில் இருந்து அவர்கள் பாடம் கற்றிருப்பார்கள்!” – Chris Gayle ஓபன் டாக்

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெறும் இந்த தொடர் என்பது, இருநாட்டு கிரிக்கெட் போர்டு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் கிடையாது. அக்டோபர் – நவம்பரில் உலகக்கோப்பை டி20 போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. அதை நடத்த வேண்டாம் என கூறி ஐ.பி.எல் நடத்தியது BCCI.’உலகக்கோப்பை கூட எங்களுக்கு வேண்டாம்; பார்டர் – கவாஸ்கர் டிராபி மட்டும் போதும்’ என கூறியது ACB. இந்த ஒரு தொடர் நடைபெறுவதற்காக பல நாடுகள் பங்குபெறும் உலகக்கோப்பை போட்டிகள் இரையாகியிருக்கிறது. தொடர்ந்து 3 வருடங்களில் 3 ஐ.சி.சி போட்டிகள் என்கிற எடக்கு முடக்கான அட்டவணை உருவானதற்கு இந்த தொடரும் ஒரு காரணம்.

அதை உணர்ந்தாவது, வீண் விதண்டாவாதங்கள் பேசி சர்ச்சை ஏற்படுத்தாமல் பரஸ்பர புரிதலோடு இந்தத் தொடரை சுமூகமாக நடத்தி முடிக்க வேண்டும்.

Related Posts

Written by:
VJ Sriram
Published on:
January 4, 2021
Thoughts:
No comments yet

Categories: Cricket, FeaturedTags: Australia Vs India, BCCI, Cricket Australia, India Tour of Australia 2020

Reader Interactions

Leave a Reply Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Primary Sidebar

Newsletter

Sign up to receive email updates and to hear about our latest adventures!

We won't sell your email or send you spam.

Recent Posts

தொடையில் பாய்ந்த குண்டு, தப்பிப் பிழைத்த வீரர்கள்! கிரிக்கெட் vs தீவிரவாதம்

இன்சமாம் – பாகிஸ்தானுக்கு சச்சினும் இவர்தான் டிராவிட்டும் இவர்தான்!

கோலி சதம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பு – அஹமதாபாத்தில் அரங்கேறுமா!

கோலி – கப் அடிச்சிட்டுத்தான் டீமுக்குள்ளயே வந்தவன்! #U19WorldCup

கெவின் ஓ பிரயன் – ஒற்றை ஆள்… இங்கிலாந்துக்குக் கொடுத்த மரண அடி!

Tags

AB de Villiers Ajinkya Rahane ATK Mohun Bagan Australia Vs India AUS vs IND BCCI Border Gavaskar Trophy Brisbane Test 2021 Chennai Super Kings Cheteshwar Pujara CSK David Warner Delhi Capitals Dhoni Dinesh karthik Hardik Pandya India Tour of Australia 2020 India vs England IPL IPL 2020 ISL Jasprit Bumrah Joe Root K.L.Rahul M.S.Dhoni MS Dhoni Mumbai Indians Natarajan Premier League R.Ashwin Raman Vijayan Ravindra Jadeja RCB Ricky Ponting Rishabh Pant Rohit Sharma Sachin Tendulkar Shreyas Iyer Shubman Gill Steve Smith Sydney Test 2021 Team India virat kohli Washington Sundar Yuzvendra Chahal

Footer

Copyright © 2021

  • About Us
  • Contact Us
  • Advertise